ADDED : செப் 26, 2025 02:28 AM
சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள சின்னராமகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் குமார் 58, இவரது மனைவி கீதா 53. ஈரோட்டில் மெக்கானிக் வேலை பார்த்த குமார் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். உடல் நிலை சரியில்லாத நிலையில் நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.
ஆபத்தான நிலையில் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.