ADDED : அக் 11, 2025 04:44 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 22, இவரது தந்தை இறந்துவிட்டார். தாயார் செல்வி 41, டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் 10 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இம்மாதம் 2ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தோஷ் குமார் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


