Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பத்தில் தெருக்கள் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் நடமாட சிரமம்

கம்பத்தில் தெருக்கள் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் நடமாட சிரமம்

கம்பத்தில் தெருக்கள் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் நடமாட சிரமம்

கம்பத்தில் தெருக்கள் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் நடமாட சிரமம்

ADDED : பிப் 06, 2024 12:25 AM


Google News
கம்பம் : கம்பம் நகராட்சியில் உள்ள பல வீதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட சிரமம் அடைகின்றனர்.

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகளில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகரில் பொது சுகாதார பராமரிப்பில் சுணக்க நிலை உள்ளது.

தெருக்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்து பொதுமக்கள் நடக்க கூட முடியாத நிலை உள்ளது.

மெயின்ரோடு, வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி, பார்க் ரோடு, கம்பமெட்டு ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.

மேலும் தியாகி வெங்கடாச்சலம் தெரு, குட்டியா பிள்ளை தெரு, கொண்டி தொழு தெரு, கிராம சாவடி வீதி, காளவாசல் வீதிகள், பாரதியார் நகர் வீதிகள், ஓடைக்கரை தெரு, நாட்டுக்கல் தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட் வீதி, மாரியம்மன் கோயில் கிழக்கு வீதி என நகரில் உள்ள பல வீதிகளில் நடக்க கூட முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது.

விவேகானந்தர் தெருவில் அகலமான வீதி, தற்போது மிக குறுகலாக உள்ளது. வீட்டு வாசல் படிகளை ரோட்டில் கட்டுவதும், சன்சைடுகளை இழுத்து கட்டுவதும், கார் மற்றும் டூவிலர் பார்க்கிங் வீதியை ஆக்கிரமித்து கட்டி உள்ளனர்.

இதுபோன்ற ஆக்கிரமிப்புகளையும் நகரமைப்பு துறை கண்டு கொள்ளாமல் உள்ளது. வர்த்தக மண்டலம், குடியிருப்பு மண்டலம் என பிரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நகரமைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us