ADDED : செப் 27, 2025 04:45 AM
ஆண்டிபட்டி: கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து
கொண்டமநாயக்கன்பட்டி வரை 2 கி.மீ.,தூரத்தில் ரோட்டில் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலையில் இடங்களை ஆக்கிரமித்து பலரும் கடைகள் அமைத்துள்ளனர். ஆக்கிரமிப்பால் ஆண்டிபட்டி நகர் பகுதியில் போக்குவரத்து மற்றும் ரோட்டின் ஓரங்களில் இட நெருக்கடி ஏற்பட்டு பலரும் பாதிப்படைந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் பிடித்து அகற்றும் பணி தொடங்கியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்றும் 2ம் நாளாக தொடர்ந்தது.


