Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தீபாவளி நாளில் மது கடைகளை  மூட மனு

தீபாவளி நாளில் மது கடைகளை  மூட மனு

தீபாவளி நாளில் மது கடைகளை  மூட மனு

தீபாவளி நாளில் மது கடைகளை  மூட மனு

ADDED : அக் 11, 2025 04:47 AM


Google News
தேனி:ஹிந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன், டி.ஆர்.ஓ., மகாலட்சுமியிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:

தீபாவளி பண்டிகை அக்.,20ல் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க வேண்டும். டாஸ்மாக்கடைகளை மூட வேண்டும். சொந்த ஊர்களுக்கு வந்து தீபாவளி கொண்டாடிவிட்டு,பணிக்கு திரும்பும் மக்கள் வசதிக்காக மறுநாள் அக்.21ல் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

பிற மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் அக்.19 முதல் அக்.22 வரை சிறப்பு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கோரியுள்ளார். தென்மண்டல தலைவர் கருப்பையா, மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் கார்த்திக் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us