Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் மதுபான பாரை அகற்ற கலெக்டரிடம் மனு

தேனியில் மதுபான பாரை அகற்ற கலெக்டரிடம் மனு

தேனியில் மதுபான பாரை அகற்ற கலெக்டரிடம் மனு

தேனியில் மதுபான பாரை அகற்ற கலெக்டரிடம் மனு

ADDED : ஜூன் 19, 2025 03:18 AM


Google News
Latest Tamil News
தேனி:தேனி தாலுகா அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தேனி சடையால் நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், 31வது வார்டு கவுன்சிலர் லதா உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், 'குடியிருப்பு பகுதி பங்களாமேடு திட்டசாலையில் தனியார் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பார் செயல்படுகிறது. இதனால் குடியிருப்போர், வழிபாட்டு தலங்களுக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

மதுபானகூடம் வேண்டாம் என கலெக்டர், எஸ்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சிலர் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். ஆய்வு செய்து தனியார் மதுபாரை அகற்றிட கோரினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us