ADDED : பிப் 06, 2024 12:35 AM

தேனி, : தேனி கே.ஆர்.ஆர்., நகர் 3வது தெருவில் மின் ஒயருக்கு இடையூறு ஏற்படுவதாக மரங்களை நகராட்சி, வனத்துறை அனுமதி இன்றி வேரோடு அகற்றினர்.
கே.ஆர்.ஆர்., 3வது தெருவில் 3 வீடுகளின் வாசலில் 2 மரங்கள் வளர்ந்திருந்தன. வீட்டின் உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு மரங்கள் இடையூறாக இருப்பதாக புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் கே.ஆர்.ஆர்., நகரில் உள்ள 2 மரங்களை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்களோ, மின்வாரிய அதிகாரிகளோ உரிய முறையில் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்காததால், இன்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொறியாளர் முருகன் தெரிவித்தார்.


