Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்

அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்

அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்

அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்

ADDED : பிப் 06, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
தேனி, : தேனி கே.ஆர்.ஆர்., நகர் 3வது தெருவில் மின் ஒயருக்கு இடையூறு ஏற்படுவதாக மரங்களை நகராட்சி, வனத்துறை அனுமதி இன்றி வேரோடு அகற்றினர்.

கே.ஆர்.ஆர்., 3வது தெருவில் 3 வீடுகளின் வாசலில் 2 மரங்கள் வளர்ந்திருந்தன. வீட்டின் உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு மரங்கள் இடையூறாக இருப்பதாக புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் கே.ஆர்.ஆர்., நகரில் உள்ள 2 மரங்களை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்களோ, மின்வாரிய அதிகாரிகளோ உரிய முறையில் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்காததால், இன்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொறியாளர் முருகன் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us