/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஐ.டி.ஐ.,களுக்கு இடையே மாநில விளையாட்டு போட்டி ஐ.டி.ஐ.,களுக்கு இடையே மாநில விளையாட்டு போட்டி
ஐ.டி.ஐ.,களுக்கு இடையே மாநில விளையாட்டு போட்டி
ஐ.டி.ஐ.,களுக்கு இடையே மாநில விளையாட்டு போட்டி
ஐ.டி.ஐ.,களுக்கு இடையே மாநில விளையாட்டு போட்டி
ADDED : மார் 25, 2025 05:12 AM

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஐ.டி.ஐ.,களுக்கிடையிலான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 286 மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டிகள் துவக்க விழாவிற்கு தேனி அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் தலைமை வகித்தார்.
ஐ.டி.ஐ., மேலாண்மை குழு தலைவர் அரவிந்த் போட்டிகளை துவக்கி வைத்தார். மண்டல பயிற்சி இணை இயக்குநர்கள் மகேஸ்வரன்(மதுரை),ஜான் போஸ்கோ(திருச்சி), பல்வேறு ஐ.டி.ஐ., முதல்வர்கள் பங்கேற்றனர்.
சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் மண்டலங்களில் இருந்து 286 மாணவர்கள் பங்கேற்றனர். குழு போட்டிகள் நடந்தது.
வாலிபால் போட்டியில் விழுப்புரம் மண்டலம் கடலுார் அரசு ஐ.டி.ஐ., முதலிடம் வென்றது. கேரம் இரட்டையர் பிரிவில் சென்னை ஆர்.கே.,நகர் ஐ.டி.ஐ., வென்றது. செஸ் போட்டியில் கோவை மண்டலம் செம்போடை அரசு ஐ.டி.ஐ., அணி, பால் பேட்மிட்டன் போட்டியில் விழுப்புரம் மண்டலம் ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ., கால்பந்து போட்டியில் கோவை மண்டலம் கூடலுார் அரசு ஐ.டி.ஐ., அணிகள் வெற்றி பெற்றன. இன்று தடகள போட்டிகள் நடக்கிறது.