/உள்ளூர் செய்திகள்/தேனி/'ஜல்ஜீவன்' திட்டப்பணி முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு; கூட்டுக்குடிநீர் முழுமையாக கிடைக்காததால் ஜெயமங்கலம் ஊராட்சியில் தவிப்பு'ஜல்ஜீவன்' திட்டப்பணி முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு; கூட்டுக்குடிநீர் முழுமையாக கிடைக்காததால் ஜெயமங்கலம் ஊராட்சியில் தவிப்பு
'ஜல்ஜீவன்' திட்டப்பணி முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு; கூட்டுக்குடிநீர் முழுமையாக கிடைக்காததால் ஜெயமங்கலம் ஊராட்சியில் தவிப்பு
'ஜல்ஜீவன்' திட்டப்பணி முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு; கூட்டுக்குடிநீர் முழுமையாக கிடைக்காததால் ஜெயமங்கலம் ஊராட்சியில் தவிப்பு
'ஜல்ஜீவன்' திட்டப்பணி முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு; கூட்டுக்குடிநீர் முழுமையாக கிடைக்காததால் ஜெயமங்கலம் ஊராட்சியில் தவிப்பு

விரைவாக கெடும் சாதம்
தேவி, ஜெயமங்லம்: முதல் வார்டு கணேசபுரம் வழியாக செல்லும் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து குடிநீர் வழங்க கோரி பல ஆண்டுகளாக ஊராட்சியிலும், ஒன்றிய நிர்வாகத்திலும் கோரிக்கை வைத்து பொதுமக்கள் ' தவித்துப் போய்விட்டோம்'. லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தலின் போது ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள் குடிநீருக்காக நாங்கள் படும் அவதியை கேட்டு உடனே செய்கிறோம் என கூறி ஓட்டு வாங்கி செல்கின்றனர்.
சுகாதார வளாகம் இன்றி சிரமம்
ராஜபாண்டி, ஜெயமங்கலம்: 3,8,9 வார்டுகள் உள்ளடங்கிய காந்திநகர் காலனி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்கள், பெண்களுக்கான சுகாதார வளாகம் இல்லை. இதனால் இயற்கை உபாதைக்கு காட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டியது உள்ளது. ஊராட்சி திருமண மண்டபத்தில் குளியலறை மூடி கிடக்கிறது. கழிப்பறை வசதி இல்லாததால் மணமக்கள் உள்பட அனைவரும் சிரமப்படும் நிலை உள்ளது.
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு
திருப்பதி, ஜெயமங்கலம்: ஹாஸ்டல் தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு ரோடு முழுவதுமாக சேதம் அடைந்து ஏற்றம், இறக்கமாக உள்ளது.
ரூ.4.50 கோடிக்கு வளர்ச்சிப்பணிகள்
அங்கம்மா, ஊராட்சி தலைவர் ஜெயமங்கலம்: 13வது நிதி குழு மாநிலத்தில் ரூ.80.15 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வார்டுகளுக்கும் வடிகால் வசதியுடன் பேவர் பிளாக் கற்கள், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு பயிற்சி மையம். 15 வது நிதிக்குழு மானியத்தில் உதயம் நகரில் ரூ.5.40 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது.


