/உள்ளூர் செய்திகள்/தேனி/சாக்கடை வசதியின்றி திறந்த வெளியில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தென்கரை பேரூராட்சி 12வது வார்டில் அடிப்படை வசதிக்கு தவிப்புசாக்கடை வசதியின்றி திறந்த வெளியில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தென்கரை பேரூராட்சி 12வது வார்டில் அடிப்படை வசதிக்கு தவிப்பு
சாக்கடை வசதியின்றி திறந்த வெளியில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தென்கரை பேரூராட்சி 12வது வார்டில் அடிப்படை வசதிக்கு தவிப்பு
சாக்கடை வசதியின்றி திறந்த வெளியில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தென்கரை பேரூராட்சி 12வது வார்டில் அடிப்படை வசதிக்கு தவிப்பு
சாக்கடை வசதியின்றி திறந்த வெளியில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தென்கரை பேரூராட்சி 12வது வார்டில் அடிப்படை வசதிக்கு தவிப்பு
பொதுக்குழாய் வசதி இல்லை
பழனியம்மாள்,கைலாசபட்டி: 12வது வார்டில் தெருக்குழாய் வசதி இல்லாததால் 500 மீட்டர் தூரம் நடந்து சென்று ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது. தெரு விளக்ககு இல்லாததால் இருளில் தவிக்கின்றோம். இரவில் தெருவில் நடந்து செல்வது சிரமமாக உள்ளது. பெண்கள் சுகாதார வளாகம் கட்டி முடித்து தண்ணீர் வசதி செய்து தரப்படாததால் பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் சிலர் ரோட்டோரத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
ரோடு வசதி இல்லை
காமாட்சி, கைலாசபட்டி : கைலாசபட்டியில் இருந்து 800 மீட்டர் தூரம் உள்ள டி.கள்ளிப்பட்டிக்கு இணைப்பு ரோடு வரை வசதி இல்லாததால் இந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மழை காலங்களில் மண்ரோடு சேறும் சகதியுமாக உள்ளது. இரு கிராமத்தினரும் அதிகளவில் பயன்படுத்தும் இப் பாதையில் இணைப்பு ரோடு வசதி இல்லை. சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆங்காங்கே குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தோண்டிய பள்ளம் மூடப்படாமல் உள்ளது. பள்ளங்களை முறையாக மூட வேண்டும்.
சுகாதார வளாகம் தேவை
சுப்புராஜ்: ஆண்கள் சுகாதார வளாகம் இல்லாததால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். திறந்தவெளியில் சாக்கடை செல்வதால் சுகாதாரகேடு நிலவுகிறது.


