ADDED : ஜூன் 19, 2025 03:11 AM
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே சிங்கராஜபுரம், பூசனூத்து பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.பூசனூத்து ரோட்டில் போலீசாரை கண்டதும் பெண் ஒருவர் அங்கிருந்து ஓடினார்.
அவரை பிடித்து விசாரித்ததில் சிங்கராஜபுரத்தை சேர்ந்த ராணி 55, என தெரிந்தது. அவரிடம் 10 கிராம் கஞ்சா, பணம் ரூ. 1200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.