Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மோதலை துாண்டும் வகையில் பதிவு வாலிபருக்கு வலை

மோதலை துாண்டும் வகையில் பதிவு வாலிபருக்கு வலை

மோதலை துாண்டும் வகையில் பதிவு வாலிபருக்கு வலை

மோதலை துாண்டும் வகையில் பதிவு வாலிபருக்கு வலை

ADDED : அக் 06, 2025 01:57 AM


Google News
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டன்பிள்ளைபுதூரைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பதிவிட்டதாக புகார் எழுந்தது.

போலீசார் அவரது இன்ஸ்டாகிராம் பதிவை ஆய்வு செய்தனர். அதில் “விட்டு கொடுத்து பழக்கமில்லை, வெட்டு கொடுத்து தான் பழக்கம்” என குறிப்பிட்டிருந்தார். மற்ற ஜாதியினரை தூண்டும் வகையில் பதிவிட்டதாகக் கருதி மாயாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் ஜாதி மற்றும் மத அடிப்படையிலான மோதலை தூண்டும் வகையில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us