Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் கேட்கிறார் முன்னாள் அமைச்சர்

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் கேட்கிறார் முன்னாள் அமைச்சர்

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் கேட்கிறார் முன்னாள் அமைச்சர்

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் கேட்கிறார் முன்னாள் அமைச்சர்

ADDED : செப் 28, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி:தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தனுஷ்கோடி ஆதித்தன் வலியுறுத்தினார்.

திருநெல்வேலியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் வலுவான மக்கள் சக்தியாக இருந்து வருகிறது. 1977, 1989 தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு அதிக இடங்களை வென்றது. வரும் தேர்தலில் கூட்டணியில் அதிக இடங்கள் பெற்று போட்டியிட வேண்டும். தி.மு.க.-விடம் வற்புறுத்தி பெற வேண்டும்.

கூட்டணி ஆட்சியில் பங்கு கோர வேண்டும் என்பதும், காங்கிரஸ் தொண்டர்களின் கருத்தாகும். தென் மாவட்டங்களில் காங்கிரஸ் இயக்கம் வலுவாக உள்ளதால், இப்பகுதியில் மாவட்டத் தலைவர், எம்.எல்.ஏ., எம்.பி. வேட்பாளர் தேர்வில் உள்ளூர் தலைவர்களுக்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

விஜய் பா.ஜ.வைக் கண்டிக்கிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம். தி.மு.க.வை விமர்சிப்பது அவருடைய சொந்த கருத்து. எங்கள் எதிரி பா.ஜ. தான். இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us