ADDED : ஆக 02, 2024 01:33 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி வெண்மனம்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 68. இவரது மகள் கலைசெல்வி, 42 கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கடந்த 26ம் தேதி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார்.
உறவினர்கள் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி நேற்று முன்தினம் பலியானார்.
இதுகுறித்து கடம்பத்துார் போலீசார், விசாரித்து வருகின்றனர்.