Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சுற்றுச்சுவர் இல்லாத சுடுகாடு: அரிசந்திராபுரம் வாசிகள் அச்சம்

சுற்றுச்சுவர் இல்லாத சுடுகாடு: அரிசந்திராபுரம் வாசிகள் அச்சம்

சுற்றுச்சுவர் இல்லாத சுடுகாடு: அரிசந்திராபுரம் வாசிகள் அச்சம்

சுற்றுச்சுவர் இல்லாத சுடுகாடு: அரிசந்திராபுரம் வாசிகள் அச்சம்

ADDED : ஜூலை 28, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரத்தில் இறந்தோரின் உடல்களை எரியூட்டுவதற்கு, சின்னம்மாபேட்டை- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வழியாக, தினமும் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சுடுகாட்டின் சுற்றுச்சுவர் சேதமடைந்து பாதிக்கும் மேற்பட்ட சுவர் உடைந்து விழுந்துள்ளது.

இதனால். சுடுகாட்டில் சடலம் எரிவதை பார்த்து, இச்சாலை வழியே பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us