Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கட்டட தொழிலாளி கழுத்தறுத்து கொலை

கட்டட தொழிலாளி கழுத்தறுத்து கொலை

கட்டட தொழிலாளி கழுத்தறுத்து கொலை

கட்டட தொழிலாளி கழுத்தறுத்து கொலை

ADDED : ஜூலை 28, 2024 07:18 AM


Google News
Latest Tamil News
திருத்தணி, : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரம் சுப்ராயன்மேஸ்திரி தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன்,45. கட்டட தொழிலாளி. இவரது வீட்டின் அருகே, வசிப்பவர் பூபதி, 54. இவர் லேத் பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, கார்த்திகேயன், பூபதியிடம், தன் வீட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் வடிகால்வாய் வழியாக செல்வதற்கு தடையாக இருப்பதற்கு காரணம், நீ வடிகால்வாய்யை சரியாக வைத்துக் கொள்ளாதது தான் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பூபதி வீட்டில் இருந்த, ஆக் ஷா பிளேடால் கார்த்திகேயனின் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் அறுத்தார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த கார்த்திகேயனை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நேற்று காலை சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார். கார்த்திகேயனுக்கு, தீபா, 35 என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான பூபதியை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us