/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தொடரும் டூ - வீலர் திருட்டு மூன்று கிராம மக்கள் பீதி தொடரும் டூ - வீலர் திருட்டு மூன்று கிராம மக்கள் பீதி
தொடரும் டூ - வீலர் திருட்டு மூன்று கிராம மக்கள் பீதி
தொடரும் டூ - வீலர் திருட்டு மூன்று கிராம மக்கள் பீதி
தொடரும் டூ - வீலர் திருட்டு மூன்று கிராம மக்கள் பீதி
ADDED : ஜூலை 30, 2024 06:39 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, அரிச்சந்திராபுரம் வியாசபுரம் ஆகிய பகுதிகளில், நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது.
இங்கு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மப்பேடு மற்றும் திருவள்ளூர் நகரை சுற்றியுள்ள தொழிற்சாலையில் பணிபுரிய, 1,000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்கின்றனர்.
இவர்கள், இரவில் தங்களின் குடியிருப்புகளின் வெளியே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வர். மறுநாள் காலை வந்து பார்க்கும் போது, அவை திருடப்படுவது தொடர்கதையாக உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் சின்னம்மாபேட்டையில் இரண்டு, அரிசந்திராபுரத்தில் ஒன்று என, மூன்று இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு உள்ளன.
திருடப்படும் இருசக்கர வாகனங்கள், அரக்கோணத்தில் பதுக்கி வைத்து, அதிலுள்ள பாகங்களை பிரித்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருவாலங்காடு காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தால் வாங்குவதில்லை என்றும், முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நாட்கள் காவல் நிலையம் அலைந்த பின்னரே, வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
திருடப்பட்ட வாகனங்களை சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்தி, வாகனம் பிடிபட்டால் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவர்கள் பீதியடைந்து உள்ளனர்.
எனவே, இருசக்கர வாகனங்கள் திருட்டை தடுக்க, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முறையாக வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.