Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு கூவம் பகுதிவாசிகள் அவதி

அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு கூவம் பகுதிவாசிகள் அவதி

அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு கூவம் பகுதிவாசிகள் அவதி

அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு கூவம் பகுதிவாசிகள் அவதி

ADDED : ஆக 05, 2024 02:42 AM


Google News
Latest Tamil News
​கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கூவம் ஊராட்சி. இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக இருளஞ்சேரி பகுதியில் சாலையோரம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுடுகாடு பகுதியைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சுடுகாடு போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும் இறந்தவர்கள் உடலை எரியூட்டும் மேடை பகுதி சேதமடைந்து, எலும்புக்கூடாக மாறி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதனால் பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் இறந்தவர் உடலை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் சுடுகாடு பகுதியில் சாலை, தண்ணீர், மின்சாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகள் இல்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சுடுகாடு பகுதியை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென, கூவம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us