Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

ADDED : அக் 06, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
பெருங்களத்துார்,

நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஷ்ணுகுமார், 50. தனியார் உள் அரங்க வடிவமைப்பாளர். நேற்று காலை, முகப்பேரில் இருந்து பணி நிமித்தமாக, 'டஸ்டர்' காரில் பெருங்களத்துாருக்கு வந்தார்.

புதுபெருங்களத்துார், காமராஜர் நெடுஞ் சாலையில் சென்ற போது, திடீரென முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. சுதாரித்த விஷ்ணு குமார், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, முன்பகுதியை திறக்க முயன்றார்.

அப்போது, முன்பகுதி திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, காரில் தீயை அணைத்தனர். இந்த விபத்தில், கார் முழுதும் எரிந்து சாம்பலானது.

இச்சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us