Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு வாடிக்கையாளர்கள் கடும் அவதி

பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு வாடிக்கையாளர்கள் கடும் அவதி

பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு வாடிக்கையாளர்கள் கடும் அவதி

பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு வாடிக்கையாளர்கள் கடும் அவதி

ADDED : ஜூன் 20, 2025 09:14 PM


Google News
திருவள்ளூர்:காக்களூர் பகுதியில் பி.எஸ்.என்.எல்., இணையதள இணைப்பு அடிக்கடி பாதிக்கப்படுவதால், மொபைல்போன் வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் ஆஞ்சநேயபுரம், பூங்கா நகர், அப்பாசாமி சாலை, மாருதி நகர் நியூ டவுன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சியில், 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

மேலும், காக்களூர் தொழிற்பேட்டையில், 350க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிமக்களில் பெரும்பாலானோர் பி.எஸ்.என்.எல்., வீட்டு இணைப்பு மற்றும் மொபைல்போன் சேவையை பெற்றுள்ளனர்.

ஆனால், காக்களூர் பகுதியில் பி.எஸ்.என்.எல்., இணையதள சேவை அடிக்கடி கிடைப்பதில்லை. ஆறு மாதங்களாகவே இப்பிரச்னை தொடர்கிறது.

காக்களூர் பாக்கியலட்சுமி நியூ டவுன் பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி ராகவேந்திர பட் கூறியதாவது:

காக்களூரில் பி.எஸ்.என்.எல்., சார்பில் இரண்டு மொபைல் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அவ்வப்போது மொபைல்போன் இணைப்புகளுக்கு இணையதள சேவை கிடைப்பதில் பெரும் தடங்கல் நீடிக்கிறது.

இதுகுறித்து, திருவள்ளூர் தொலைபேசி அலுவலகத்தில் புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் குறையை சரிசெய்து, வாடிக்கையாளர்களுக்கு விரைவான இணையதள சேவையை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us