/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா மக்கள், வாகன ஓட்டிகள் 'திக்... திக்' நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா மக்கள், வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா மக்கள், வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா மக்கள், வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா மக்கள், வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : செப் 24, 2025 03:28 AM

கடம்பத்துார்:புதுமாவிலங்கை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது புதுமாவிலங்கை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள கொண்டஞ்சேரி - திருப்பாச்சூர் நெடுஞ்சாலை வழியாக, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு, வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், நெடுஞ்சாலையில் பல இடங்களில் இளைப்பாறுகின்றன. இதனால், வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருவதோடு, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக, இந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கலெக்டர், எஸ்.பி., உத்தரவிட்டும், நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.