Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

ADDED : அக் 15, 2025 10:54 PM


Google News
ஊத்துக்கோட்டை: லாரி மோதிய விபத்தில், சைக்கிளில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 55. இவர், நேற்று முன்தினம் இரவு, தண்டலம் பஜாரில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த லாரி மோதியது. படுகாயமடைந்த சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார்.

பெரியபாளையம் போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us