Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரயில்வே சுரங்கப்பாதை கசிவை முற்றிலும் அடைக்க கோரிக்கை

ரயில்வே சுரங்கப்பாதை கசிவை முற்றிலும் அடைக்க கோரிக்கை

ரயில்வே சுரங்கப்பாதை கசிவை முற்றிலும் அடைக்க கோரிக்கை

ரயில்வே சுரங்கப்பாதை கசிவை முற்றிலும் அடைக்க கோரிக்கை

ADDED : செப் 24, 2025 09:39 PM


Google News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில்வே சுரங்கப்பாதை யில் ஏற்பட்டு வரும் கசிவை முற்றிலும் அடைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, ரயில் தண்டவாளத்தின் கீழ், சிப்காட் பகுதியை இணைக்கும் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை ஏழு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக, சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர் வழியாக, தண்ணீர் கசிந்து வருகிறது.

இதனால் மழைக்காலம் மட்டுமின்றி, மற்ற நாட்களிலும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால், அதை கடந்து செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கசிவை அடைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, 2022 நவம்பரில் ரயில்வே நிர்வாகத்தினர், கசிவை அடைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

திரவ நுரையை உட்செலுத்தி, அதன் மூலம் கசிவை அடைக்கும், 'போம் இன்ஜெக்டர்' முறையில் கசிவுகளை அடைத்தனர்.

அடுத்த சில நாட்களில், அந்த இடங்களை தவிர்த்து, புதிய இடங்களில் இருந்து தண்ணீர் கசிய துவங்கியது.

தற்போது, கசிவுகள் அதிகரித்து, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுரங்கப்பாதை பலவீனமாவதுடன், கசியும் தண்ணீரால் சாலையும் குண்டும், குழியுமாக மாறி வருகிறது.

எனவே, ரயில்வே நிர்வாகத்தினர் நிரந்தர தீர்வு கண்டு, முற்றிலும் கசிவை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us