Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம்

முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம்

முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம்

முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம்

ADDED : அக் 13, 2025 01:29 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், மூலவரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். மேலும், நுாறு ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us