Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

ADDED : அக் 06, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
திருத்தணி,:திருத்தணி முருகன் கோவிலில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், மூலவரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர்.

முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் வீதியுலா வந்தார்.

குரங்குகள் பிடிப்பு முருகன் கோவிலில் குரங்குகள் தொல்லை அதிகரித்து இருந்தது. சில நேரங்களில் குரங்குகள், பக்தர்களை கடிக்க பாய்கிறது. இதையடுத்து, திருத்தணி கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் ஒன்றிணைந்து, மலைக்கோவிலில் சுற்றித்திரிந்த, 15 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us