Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு

வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு

வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு

வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 15, 2025 08:04 PM


Google News
திருவாலங்காடு:முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில், நடப்பு நிதியாண்டில், 25,000 வீடுகள் கட்டுவதற்கு, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில், 42 ஊராட்சிகளில் 90க்கும் மேற்பட்ட வீடுகள் பயன்பெற உள்ளன.

இதுகுறித்து, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரி கூறியதாவது:

கடந்த 2001 மார்ச் 31ம் தேதிக்கு முன், அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், தங்கள் வீடு பழுதடைந்திருந்தால் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 210 சதுர அடியில் வீடு கட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பட்டா, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், இரண்டு போட்டோ ஆகியவற்றுடன் ஊராட்சி அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

திருவாலங்காடு ஒன்றிய பகுதிகளில், அரசு திட்டத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளும், மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே, அவர்களும் விண்ணப்பிக்கலாம் என, விதியை தளர்த்த அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us