Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வேளாண் கிடங்கு அருகே குப்பை கழிவு

வேளாண் கிடங்கு அருகே குப்பை கழிவு

வேளாண் கிடங்கு அருகே குப்பை கழிவு

வேளாண் கிடங்கு அருகே குப்பை கழிவு

ADDED : அக் 06, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில், கூடுதல் வேளாண் கிடங்கு கட்டடம் உள்ளது. இந்த வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம், சமுதாய கூடம், நுாலகம் மற்றும் வாரச்சந்தையும் இயங்கி வருகிறது.

இந்நிலையில், வேளாண் கிடங்கு அருகே ஊராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பையில் உரம் தயாரிக்காமல், நாளுக்கு நாள் குப்பை குவியல் அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது.

குப்பைகளை அகற்ற வேண்டும் என, வேளாண் துறை அலுவலர்கள், வியாபாரிகள் மற்றும் வாசகர்கள் பல மாதங்களாக புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டி வருகிறது.

துாய்மை பணியாளர்களிடம், வேளாண் கிடங்கு பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவுறுத்தியும், தொடர்ந்து குப்பைகள் கொட்டுகின்றனர்.

எனவே, கே.ஜி.கண்டிகை மக்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள் நலன் கருதி, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us