Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

ADDED : ஜூன் 20, 2025 08:36 PM


Google News
திருத்தணி:பொன்பாடி ரயில் நிலையத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us