Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நீர்வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை

நீர்வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை

நீர்வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை

நீர்வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை

ADDED : செப் 26, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
அரண்வாயல்:'கூவம் ஆற்றிற்கு வரும் நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகேயுள்ளது அரண்வாயல் ஊராட்சி.

இப்பகுதியை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், திருமழிசை -- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே செல்லும் நீர்வரத்து கால்வாய் வழியாக பயணித்து, கூவம் ஆற்றில் கலக்கிறது.

இந்த நீர்வரத்து கால்வாய், போதிய பராமரிப்பு இல்லாததால் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

தற்போது, இக்கால்வாய் குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால், கூவம் ஆறு கழிவு நீர் ஆறாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நீர்வள ஆதார துறையினர் அரண்வாயல் பகுதியில் ஆய்வு செய்து, கூவம் ஆற்றிற்கு வரும் நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us