ADDED : பிப் 29, 2024 10:04 PM
பெரியபாளையம்:வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசரத் கிராமத்தை ஒட்டியுள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த 'பொலிரோ' காரை மடக்கினர். போலீசாரை கண்டதும் ஓட்டுனர் தப்பியோடினார். இதையடுத்து, வாகனத்தை சோதனை செய்ததில், அதில் மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், தப்பி ஓடிய ஓட்டுனர் மற்றும் வாகன உரிமையாளரை தேடி வருகின்றனர்.


