Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை ஜெ.ஜெ.கார்டன் மக்கள் கடும் அவதி

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை ஜெ.ஜெ.கார்டன் மக்கள் கடும் அவதி

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை ஜெ.ஜெ.கார்டன் மக்கள் கடும் அவதி

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை ஜெ.ஜெ.கார்டன் மக்கள் கடும் அவதி

ADDED : அக் 06, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே, பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார் கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் அமைந்துள்ள இந்நகரில், 100க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடிபெயர்ந்துள்ளனர். மேலும், பல வீடு இங்கு புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.

இங்கு, அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்நகரில், இரண்டு இடத்தில் குடிநீர் தொட்டி அமைத்தும், இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

கோடைக்காலத்தில் குடிநீர் கிடைக்காமல், தண்ணீர் கேன்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சாலை வசதி இல்லாததால், மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி, நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது.

இரவு நேரத்தில், பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகள் இல்லாததால், இருளில் மூழ்கியுள்ள இந்த நகரில், பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.

எனவே, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள், ஜெ.ஜெ.கார்டனில் போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us