/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முருகன் கோவிலில் கிருத்திகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் முருகன் கோவிலில் கிருத்திகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகன் கோவிலில் கிருத்திகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகன் கோவிலில் கிருத்திகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகன் கோவிலில் கிருத்திகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED : அக் 11, 2025 12:31 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று புரட்டாசி மாத கிருத்திகையை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். பின், தேர்வீதியில் வீதியுலா வந்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.
பள்ளிப்பட்டு: நெல்லிக்குன்றம் சுப்ரமணி சுவாமி கோவிலில், காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உத்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமான், மலைக்கோவிலில் உள்புறப் பாடு எழுந்தருளினார். அதேபோல், நெடியம் செங்கல்வராய சுவாமி கோவில், கரிக்கல் குமரேசகிரி முருகர் கோவில்களிலும் நேற்று கிருத்திகை உத்சவம் விமரிசையாக நடந்தது.
வல்லக்கோட்டை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவிலில், நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை நடந்தது.
காலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


