ADDED : அக் 15, 2025 10:59 PM
புல்லரம்பாக்கம்: புல்லரம்பாக்கம் பகுதியில் வயல்களில் ஒயர் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் உதயகுமார், 45. இவரது விவசாய நிலத்தில், நீர் பாய்ச்சுவதற்கு அமைக்கப்பட்ட மின்மோட்டார்களிலிருந்து, 10 மீட்டர் ஒயர் திருடு போனதாக, புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இதுகுறித்து, வழக்கு பதிந்து புல்லரம்பாக்கம் போலீசார், திருவள்ளூரைச் சேர்ந்த சந்தோஷ், 21 மற்றும் ஈக்காடு அபினேஷ், 21, ஆகியோரை கைது செய்தனர்.


