Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலை விபத்தில் இருவர் படுகாயம்

சாலை விபத்தில் இருவர் படுகாயம்

சாலை விபத்தில் இருவர் படுகாயம்

சாலை விபத்தில் இருவர் படுகாயம்

ADDED : அக் 22, 2025 10:42 PM


Google News
திருத்தணி: சித்துார் மாவட்டம் நகரியைச் சேர்ந்தவர்கள் சிவா, 40, மணி, 47. இருவரும் நேற்று காலை இரு சக்கர வாகனத்தில், நகரியில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us