Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

தூத்துக்குடியில் டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

தூத்துக்குடியில் டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

தூத்துக்குடியில் டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

ADDED : ஜன 17, 2024 12:03 AM


Google News
தூத்துக்குடி : தூத்துக்குடியில் டூவீலர்கள் மோதிக் கொண்டதில் இருவர் பலியாயினர்.

தூத்துக்குடி அத்திமரப்பட்டியைச் சேர்ந்த ஜெயமுருகன் மகன் அருண் 20. ஸ்பிக் நிறுவனத்தில் வெல்டராக பணி செய்தார். நேற்று முன்தினம் மாலையில் முத்தையாபுரத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு டூவீலரில் அத்திமரப்பட்டி திரும்பிக் கொண்டிருந்தார்.

எதிரே தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த முருகன் 58, என்பவர் டூவீலரில் வந்தார். இரு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவரும் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாயினர். முத்தையாபுரம் போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us