ADDED : ஜூன் 30, 2024 12:33 AM
திருப்பூர்:திருப்பூர், 23வது வார்டு நாராயணசாமி நகரில், மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஆனால், மழைநீர் வழிந்தோடி செல்வதற்கேற்ப வாட்டம் இல்லாமல் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ள குடிநீர் குழாய் உடைபட்டு, தண்ணீர் கால்வாயில் வீணாகிறது; இதனால், மாசடைந்த நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்கின்றனர் மக்கள்.