Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூட்டுறவு வங்கி பணிக்காக 1,197 பேர் தேர்வெழுதினர்

கூட்டுறவு வங்கி பணிக்காக 1,197 பேர் தேர்வெழுதினர்

கூட்டுறவு வங்கி பணிக்காக 1,197 பேர் தேர்வெழுதினர்

கூட்டுறவு வங்கி பணிக்காக 1,197 பேர் தேர்வெழுதினர்

ADDED : அக் 12, 2025 10:29 PM


Google News
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் நடந்த கூட்டுறவு வங்கி பணிக்காக நடந்த தேர்வில், 1,197 பேர் எழுதினர்.

கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மத்திய மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக, அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதனடிப்படையில் எழுத்து தேர்வு நேற்றுமுன்தினம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி மற்றும் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இத்தேர்வு காலை துவங்கி பிற்பகல் வரை நடைபெற்றது.

இதில் குமரன் கல்லுாரியில், 713 பேரும், கே.எஸ்.சி., பள்ளியில், 484 பேர் என மொத்தம் 1,197 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வெழுதினர். இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைப்பதிவாளர் பிரபு தலைமையில், துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us