ADDED : மே 27, 2025 11:37 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில், ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.
மையங்களில் சுழற்சி முறையில், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைதோறும் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 1ம் தேதி, ஊத்துக்குளி தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள், மாணவ, மாணவியர், உரிய ஆவணங்களை எடுத்துச்சென்று, புதிய ஆதார் பதிவு, ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் திருத்தம் செய்யலாம்.