Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பலகாரத் தயாரிப்பாளருக்கு அறிவுரை

பலகாரத் தயாரிப்பாளருக்கு அறிவுரை

பலகாரத் தயாரிப்பாளருக்கு அறிவுரை

பலகாரத் தயாரிப்பாளருக்கு அறிவுரை

ADDED : அக் 14, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உணவு நிறுவனத்தினருக்கான ஆலோசனை கூட்டம், ரமணாஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் பேசியதாவது:

உணவு வணிகர்கள், உணவு பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்று பெறவேண்டும். உணவு தயாரிப்புக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தரச்சான்று பெற்ற குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் தொடர் ஆய்வு நடத்துவர்; விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தயாரிப்பாளர், விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள், உணவு சம்பந்தமான புகார்களை, 94440 42322 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில் செயல்படும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு, உணவு தயாரிப்பில் கடைபிடிக்கவேண்டிய 32 அம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us