/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மண்டல கூட்டத்தில் 'பொறி' பறந்த குற்றச்சாட்டுகள் மண்டல கூட்டத்தில் 'பொறி' பறந்த குற்றச்சாட்டுகள்
மண்டல கூட்டத்தில் 'பொறி' பறந்த குற்றச்சாட்டுகள்
மண்டல கூட்டத்தில் 'பொறி' பறந்த குற்றச்சாட்டுகள்
மண்டல கூட்டத்தில் 'பொறி' பறந்த குற்றச்சாட்டுகள்

முறையற்ற பணி
ஆக்கிரமிப்புகள்
அன்பகம் திருப்பதி, அ.தி.மு.க.: மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை பல பகுதிகளிலும், சட்ட விரோதமாக சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மாநகராட்சி சொந்தமான இடங்களைக் கண்டறிந்து, மீட்க வேண்டும். அங்கு மக்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக்கூடம் போன்றவை ஏற்படுத்த வேண்டும்.
குப்பை தேக்கம்
சேகர், அ.தி.மு.க.: நகரப் பகுதியில் சேகரமாகும், குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. தற்போது துாய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் வார்டுகளில் குப்பை தேங்கி வருகிறது. மழைக்காலமாக உள்ளதால், இதனால் மேலும் பிரச்னை ஏற்படும்.
கழிவுநீர் தேக்கம்
சாந்தி, தி.மு.க.,: லிட்டில் பிளவர் நகரில் ஆழ்குழாய் மோட்டார் பழுதாகி, சர்வீஸ் செய்தும் பயன்படுத்த முடியவில்லை. புதிய மோட்டார் பொருத்த வேண்டும். முல்லை நகர், 3வது வீதி சாக்கடை கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
கிடப்பில் பணி
சாந்தாமணி, ம.தி.மு.க.,: பல்வேறு திட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் நிறைவடையாமலும், துவங்கப்படாமலும் கிடப்பில் போட்டுக் கிடக்கிறது. அதிகாரிகளை கேட்டால், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவை உள்ளது. எனவே, அவர்கள் பணிகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


