Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

ADDED : அக் 20, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது. பல்லவராயன்பாளையம் ஸ்ரீராமச்சந்திரா மிஷன் டி.ஜெ., பார்க் ஆசிரம வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆசிரம நிர்வாகி ரங்கசாமி, சக் ஷம் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தனர்.

பழனிசாமி - பொன்னம்மாள்அறக்கட்டளை நிர்வாகி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கடந்த மாத முகாமில், அளவீடு செய்த, 29 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை அவயம் வழங்கப்பட்டது. ஸ்ரீதரா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், செயற்கை அவயம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us