Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் ஏலம் 

வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் ஏலம் 

வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் ஏலம் 

வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் ஏலம் 

ADDED : அக் 21, 2025 11:05 PM


Google News
திருப்பூர்: வழக்குகளில் போலீசார் பறிமுதல் செய்து உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர போலீசாரால், பல்வேறு போதை பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட, 27 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.

இவை வரும், 24ம் தேதி திருப்பூர் மாநகர போலீஸ் பிரிவின், நல்லுார் ஆயுதப்படை வளாகத்தில் உள்ளது உள்ளபடி என்ற நிலையில், ஏலம் விடப்படவுள்ளது. ஏலத்தில் விடப்படவுள்ள வாகனங்களை பார்வையிட விரும்புவோர், இன்று (22ம் தேதி), காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, நல்லுார் ஆயுதப் படை வளாகத்தில் அவற்றைப் பார்வையிடலாம்.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், டிபாசிட் தொகை, 500 ரூபாய், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us