Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு மருத்துவமனை முன் இடையூறாக 'பேனர்' ; உடனடியாக அகற்ற சுகாதாரத்துறை உத்தரவு

அரசு மருத்துவமனை முன் இடையூறாக 'பேனர்' ; உடனடியாக அகற்ற சுகாதாரத்துறை உத்தரவு

அரசு மருத்துவமனை முன் இடையூறாக 'பேனர்' ; உடனடியாக அகற்ற சுகாதாரத்துறை உத்தரவு

அரசு மருத்துவமனை முன் இடையூறாக 'பேனர்' ; உடனடியாக அகற்ற சுகாதாரத்துறை உத்தரவு

ADDED : செப் 24, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் முன்பு, எவ்வித அனுமதியும் பெறாமலும், இடையூறாகவும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றவேண்டும் என மாவட்ட பேரவை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், விதிமீறி வைக்கப்படும் பேனர்களை அகற்றவேண்டும் என்கிற குரல் ஒலித்தது.

கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மனோன்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 13 ஒன்றியங்களில் நடத்தப்பட்ட வட்டார சுகாதார பேரவை தீர்மானங்கள், மாநகராட்சியில் நடைபெற்ற சுகாதார பேரவை தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. திருப்பூர், பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், காங்கயம், தாராபுரம் உள்பட அனைத்து அரசு மருத்துவமனை, சுகாதார மைய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பேரவையில் அங்கம்வகிக்கும் தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் ஒருபகுதியாக, சுகாதாரத்துறை சார்பில், கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட்டிருந்தன. நோய் தொற்று, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு, சிக்குன்-குனியா பரவலுக்கான காரணம், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சுகாதாரமான உணவு பொருட்களை வாங்குவது தொடர்பான அம்சங்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us