ADDED : அக் 08, 2025 11:50 PM
வலிமை சேவை அமைப்பு, திருப்பூர் மாவட்ட சிமென்ட் ஸ்டீல்ஸ் வியாபாரிகள் நல சங்கம் சார்பில், போயம்பாளையம் பிரிவு ஸ்ரீ சரண் மருத்துவமனையில் அரசு மருத்துவமனைக்கான ரத்த தான முகாம் நடந்தது.
எம்.எல்.ஏ., விஜயகுமார் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவமனை சேர்மன் பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


