Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வீடு தேடி ரேஷன் பொருள் வினியோக நாளில் மாற்றம்

வீடு தேடி ரேஷன் பொருள் வினியோக நாளில் மாற்றம்

வீடு தேடி ரேஷன் பொருள் வினியோக நாளில் மாற்றம்

வீடு தேடி ரேஷன் பொருள் வினியோக நாளில் மாற்றம்

ADDED : அக் 02, 2025 01:10 AM


Google News
திருப்பூர்; கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில், தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டு வந்தது.

இம்மாதத்தில், வரும் 5ம் தேதி (ஞாயிறு), 6ம் தேதி (திங்கள்) ஆகிய இரண்டு நாட்கள், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் சார்ந்த பயனாளிகள், தங்கள் மொபைல் எண் மற்றும் முகவரியில் மாற்றம் இருப்பின், சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் அருகிலுள்ள ரேஷன் கடையில் தெரிவித்து, சரி செய்துகொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us