Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொடர் மழை; சில்லுன்னு சீதோஷ்ணம்

 தொடர் மழை; சில்லுன்னு சீதோஷ்ணம்

 தொடர் மழை; சில்லுன்னு சீதோஷ்ணம்

 தொடர் மழை; சில்லுன்னு சீதோஷ்ணம்

ADDED : டிச 01, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
உடுமலை: தொடர் மழையால், நகரில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியது; குளிர்ந்த சீதோஷ்ணத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், பகல் முழுவதும் சாரல் மழை தொடர்ந்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது; இரவில் பரவலாக மழை பெய்தது.

அதிகபட்சமாக பெதப்பம்பட்டியில், 72 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது. அமராவதி அணை 23; திருமூர்த்தி அணையில், 22; நல்லாறு பகுதியில், 14 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.

நகரில் பெய்த மழையால், உழவர் சந்தை ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மழை நீர் வெளியேறாமல் தேங்கி, மக்கள் சிரமப்பட்டனர்.

இரு நாட்களாக பெய்த மழை, குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us