Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பட்டம்' இதழ் வினாடி வினா மாணவர்கள் ஆர்வப்பெருக்கு

 'பட்டம்' இதழ் வினாடி வினா மாணவர்கள் ஆர்வப்பெருக்கு

 'பட்டம்' இதழ் வினாடி வினா மாணவர்கள் ஆர்வப்பெருக்கு

 'பட்டம்' இதழ் வினாடி வினா மாணவர்கள் ஆர்வப்பெருக்கு

ADDED : டிச 05, 2025 08:01 AM


Google News
Latest Tamil News
'பட்டம்' இதழ் வினாடி வினா மாணவர்கள் ஆர்வப்பெருக்கு

திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா போட்டியில், பூமலுார் - பல்லடம் ரோடு, மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று அசத்தினர்; திறமை காட்டியவர்கள், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

மாணவர்களின் சிந்தனையாற்றல் வேகப்படுத்தி, பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

மொழிப்பாடங்கள் மட்டுமின்றி உயர்கல்விக்கு உதவும், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களின் மீதும் மாணவ, மாணவியருக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தி, அவர்களை ஊக்குவிக்க, வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.

பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதி போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சத்யா ஏஜென்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில், சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

திருப்பூர், மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில், 50 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர்.

பல சுற்றுகளாக நடந்த போட்டியில், 'சி' அணியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர் தனுஸ்ரீ, 'ஏ' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்; இரு வருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி தாளாளர் ஸ்ரீ சரண்யா ராஜ்குமார், முதல்வர் காந்திபிரியதர்சனி ஆகியோர் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர் களுக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழுடன் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா போட்டியில் சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us