Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருடர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்

திருடர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்

திருடர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்

திருடர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்

ADDED : அக் 12, 2025 11:33 PM


Google News
திருப்பூர்:தீபாவளியையொட்டி, திருப்பூரில், முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதே கோபுரத்தில், 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் கூடும் இடங்களில், வழிப்பறி திருடர்கள், 'ஜேப்படி' ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் 'மப்டி' உடையில் ரோந்து சென்று வருகின்றனர்.

போலீசார் பாதுகாப்பு அளித்தாலும், கூட்டத்தை பயன்படுத்தி 'கல்லா'வில் உள்ள நபர்களை, திசை திருப்பி பொருட்களை எடுத்து செல்வது; பணத்தை கொடுக்காமல் கொடுத்தேன் என்று சில்லறை வாங்குவது போன்ற நுாதன மோசடியில் ஈடுபடும் கும்பல் மாநகருக்குள் வலம் வருகிறது. வியாபாரிகள் உஷாராக இருந்து பொருட்கள், பணம் போன்றவற்றை பறி கொடுக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் இருந்தால், தங்களை பின்தொடர்ந்தால் உடனே அருகே போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் கூறியதாவது:

பண்டிகைக்கு ஊருக்கு கிளம்பும் மகிழ்ச்சியில் தங்கள் எண்ணம் முழுதும் அதில் இருக்கும். பொது இடத்தில் மணிபர்ைஸ எடுத்து பணம் எடுப்பது போன்றவை செய்ய வேண்டாம். பயணத்துக்கான சிறிய தொகையை மட்டும் கையில் வைத்து கொள்ளுங்கள்.

பயணத்தின் போது, மற்றவர்கள் பார்க்கும் போது, பர்ைஸ பேக்கில் வைப்பது, பணத்தை எண்ணுவது போன்றவற்றை செய்யக்கூடாது.

கூட்டத்தில் மொபைல் போன், மணி பர்ஸ் போன்றவற்றை, உள்ளாடைக்குள் இருக்கும் வகையில் வைத்து கொள்ளுங்கள்.

பேன்ட் பின்புறம் மற்றும் முன்புறம் மணிபர்ஸ் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

தின்பண்டங்கள் யார் கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம்.

விலை உயர்ந்த நகையை குழந்தைகளுக்கு அணிவது, பெரியவர்கள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us