Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலி துப்பாக்கி உரிமம்; பீஹார் ஆசாமி கைது

போலி துப்பாக்கி உரிமம்; பீஹார் ஆசாமி கைது

போலி துப்பாக்கி உரிமம்; பீஹார் ஆசாமி கைது

போலி துப்பாக்கி உரிமம்; பீஹார் ஆசாமி கைது

ADDED : அக் 10, 2025 01:08 AM


Google News
திருப்பூர்; பீஹாரை சேர்ந்தவர் ஸ்ரீ உமேஷ் சிங், 55. திருப்பூர், எஸ்.பெரியாயிபாளையத்தில் தங்கி, பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். அவர் வைத்திருக்கும் துப்பாக்கியின் உரிமம் போலியானது என திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தெரிய வந்தது.

இதுதொடர்பாக, கடந்த மாதம் வங்கியில் பணியில் இருந்த உமேஷ் சிங்கிடம் விசாரித்தனர். துப்பாக்கிக்கான உரிம ஆவணத்தை கொடுத்தார். அதை பெற்று போலீசார் விசாரித்த போது, ஆவணம் போலியானது என தெரிய வந்தது. தொடர்ந்து தலைமறைவானார்.

இந்நிலையில், அவர், உ.பி., மாநிலத்துக்கு தப்பி சென்றது தெரிந்தது. அவரை தேடி தனிப்படையினர் விரைந்தனர். அங்கிருந்து பீஹாருக்கு தப்பி சென்ற அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து அழைத்து வந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us