/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அனல் தெறித்த போராட்ட களத்தில் அமைதி அரசாணைக்கு வித்திட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அனல் தெறித்த போராட்ட களத்தில் அமைதி அரசாணைக்கு வித்திட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள்
அனல் தெறித்த போராட்ட களத்தில் அமைதி அரசாணைக்கு வித்திட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள்
அனல் தெறித்த போராட்ட களத்தில் அமைதி அரசாணைக்கு வித்திட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள்
அனல் தெறித்த போராட்ட களத்தில் அமைதி அரசாணைக்கு வித்திட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள்
கொத்து கொத்தாக பலி
நாய்களின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு, ஆடு, கோழிகள் கொத்து கொத்தாக பலியாகின. 2024 மே மாதம், வெள்ளகோவில் பி.ஏ.பி., கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தினர், முதன் முறையாக இப்பிரச்னையை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். 'நாய்கள் கடித்து இறக்கும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
இணைந்த கைகள்
இறந்த கால்நடைகளுடன் அந்தந்த பகுதியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் முன் முற்றுகை, தர்ணா, காத்திருப்பு போராட்டம் என, அடுத்தடுத்த போராட்டங்களை பி.ஏ.பி., கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தினர் முன்னெடுக்க, பல்வேறு விவசாய சங்கத்தினரும் களமிறங்கினர். தெருநாய்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணர்ந்தது அரசு
இவ்வாறு, தெரு நாய்களால் கால்நடைகள் பலியாகும் விவகாரம், மாநில மற்றும் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியது. அதன் தொடர்ச்சியாக, 'நாய்கள் கடித்து இறக்கும் மாடுகளுக்கு, 37,500, ஆடுகளுக்கு, 4,000, கோழிகளுக்கு, 100 ரூபாய் இழப்பீடு வழங்கும் அறிவிப்பை, அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஆடுகளுக்கான இழப்பீடு தொகை, 6,000, கோழிகளுக்கு, 200 உயர்த்தி வழங்குவது தொடர்பான அரசாணை விரைவில் வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.